states

img

சென்னை – திருப்பதி இடையிலான விரைவு ரயில் சேவை ரத்து  

சென்னை – திருப்பதி இடையிலான தினசரி விரைவு சேவை ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  

திருமலையில் தொடர் கனமழை காரணமாக சென்னை – திருப்பதி இடையிலான ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. உபரிநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருவதால் திருமலையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ரேணிகுண்டா – புடி இடையே ரயில் பாதைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 2:15 மணிக்கு இயக்கப்படவிருந்த திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

;